தங்கையின் தோழியிடம் காதல் போர்வையில் பாலியல் பலாத்காரம்.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
Coimbatore Child Sexual abuse by Drama Love 16 Feb 2021
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய காமுக இளைஞனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியை சார்ந்தவன் பிரகாஷ் (வயது 18). இவன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவனுக்கு தங்கை இருக்கிறார். இந்த தங்கையின் 16 வயது தோழியுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளான்.
பின்னாளில், நான் உன்னை காதலிக்கிறேன் என நாடகக்காதல் வலையை வீசிய நிலையில், சிறுமியும் அதனை நம்பி காதலித்து வந்துள்ளார். இருவரும் காதல் செய்யும் சமயங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இதன்போது, திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரியவரவே, அவரை கண்டித்து கேரளாவில் இருக்கும் உறவினரின் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
அப்போது, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதி செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காமுகன் பிரகாஷை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Child Sexual abuse by Drama Love 16 Feb 2021