கோவை: நாடக காதல் வலையில் விழுந்த 17 வயது சிறுமி.. பேஸ்புக் நட்பூ, கால் டாக்சி ஓட்டுநர் என அனுபவித்த துயரம்..!
Coimbatore Child girl Sexual abuse by Facebook Friend and Call Taxi Driver Drama Love
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி மாயமாகிவிட்டதாக செல்வபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் அலைபேசி எண் சிறுமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் இருப்பதாக காண்பித்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்ட தனிப்படை காவல் துறையினர், செல்வபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். இதன்போது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியானது.
இது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆண் நண்பர் உட்பட 3 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. 11 ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுமி, அவ்வப்போது முகநூலை உபயோகம் செய்து வந்த நிலையில், முகநூலில் பெண் என வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்ததால், அதிக அளவிலான ஆண் நண்பர்கள் அவரின் நண்பர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இதனைப்போன்று அறிமுகமான கடலூரை சார்ந்த ஏழுமலை (வயது 27), முதலில் நட்பாக பழகுவது போல் பழகி பின்னர் காதல் வலையில் சிறுமியை வீழ்த்தியுள்ளான். இதனையடுத்து இருவரும் முகநூலில் தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்து, திருச்சியில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
நயவஞ்சக எண்ணத்துடன் சிறுமியுடன் பழகி வந்த கொடூரனின் உண்மை முகம் தெரியாமல் சிறுமி திருச்சி செல்ல முடிவு செய்யவே, திருச்சி செல்வதற்கு முகநூலில் அறிமுகமாகிய திருப்பூரை சார்ந்த கால் டாக்சி ஓட்டுநர் சண்முகம் (வயது 30) என்பவனிடம் உதவி கோரியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியிடம் விஷயத்தை கேட்டறிந்து அத்துமீற ஆசைப்பட்ட காமுகன் சண்முகம், சிறுமியை திருச்சிக்கு அழைத்து செல்வதாக கூறி ஊட்டிக்கு அழைத்து சென்று 3 நாட்கள் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன்பின்னர் இருந்தால் சிக்கல் என்று உணர்ந்துகொண்டு திருச்சிக்கு அழைத்துச்சென்று விடவே, காமுகன் ஏழுமலையும் சிறுமியை 3 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதன்பின்னர் அம்போவென நடுத்தெருவில் விடவே, எங்கு செல்வது என்று தெரியாமல் வேளாங்கண்ணிக்கு சென்று அலைபேசியை ஆன் செய்துள்ளார். இதன்பின்னரே காவல் துறையினருக்கு சிறுமி வேளாங்கண்ணியில் இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கால் டாக்சி ஓட்டுநர் சண்முகம் மற்றும் காமுகன் ஏழுமலையை காவல் துறையினர் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
படிக்கும் வயதில் காதல் தேவையற்றது. பருவ வயதில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்புகள் தொடர்பாக பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எடுத்துரைத்து நல்வழிப்படுத்தினால் மட்டுமே பெண் பிள்ளைகளை காமுக கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற இயலும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Child girl Sexual abuse by Facebook Friend and Call Taxi Driver Drama Love