15 வயது சிறுமி பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கோவையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சனை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த அநீதிகள் கொடூர உச்சகட்டங்கள் பெரும் சோகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.. 

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு மற்றும் அவனது கூட்டாளிகளால் அரங்கேறிய கொடூரமும், அதற்கு அடுத்தபடியாக காதலன் என்று நம்பி சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்தின் கொடூரமும் பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. 

இந்த நிலையில், கோயம்புத்தூரில் 15 வயது சிறுமி 10 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியை சார்ந்த 15 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். 

சிறுமியை இப்பகுதியை சார்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இது குறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore 15 year child girl sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->