சென்னை புத்தகத் திருவிழா.. ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் 46வது புத்தகத் திருவிழா இன்று தொடங்க உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் சென்னை புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புத்தகத் திருவிழாவில் உலக அளவில் புகழ்பெற்ற புத்தகங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக இந்த புத்தக கண்காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பதிப்புகளும் இடம்பெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin inaugurates the Chennai Book Festival today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->