மீண்டும் வெடித்த கனகசபை விவகாரம்.!! நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ விழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்நிலையில் ஆருத்ரா தரிசனம் இன்று முதல் வரும் டிசம்பர் 28ம் தேதி வரை நடைபெறும். முன்னதாக பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. 

அனால் அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தடுத்ததாக  குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக தீட்சிதர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் கனகசபை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram nataraja temple kanaka sabha issue tnhrec complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->