68 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம்.. காமுகன் கைது.!
Chennai Thiruvotriyur Old Lady Sexual Abuse Complaint Police Arrest Culprit
சென்னையில் உள்ள திருவெற்றியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், 68 வயது மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர் கிருஷ்ணவேணி என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட காமுகனை காவல் துறையினர் தேடி வந்தனர். இதனையடுத்து சத்தியமூர்த்தி நகர் பகுதியை சார்ந்த 32 வயது ஜெயக்குமார் என்பவனை கைது செய்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று மருத்துவமனைக்கு அருகேயுள்ள மதுபானக்கடையில் மது அருந்திய ஜெயக்குமார், மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல நடித்து கடத்தி சென்று மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அவனிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்கையில் மூதாட்டியை அடித்து கொலை செய்து இருக்கிறான். உயிருக்கு போராடிய மூதாட்டி, மருத்துவமனை வாயில் வரை தள்ளாடியடி வந்து, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என்பது உறுதியானது. இதனையடுத்து ஜெயக்குமாரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Thiruvotriyur Old Lady Sexual Abuse Complaint Police Arrest Culprit