இணையதள வகுப்புகள் புரியவில்லை.. விபரீத முடிவெடுத்த 14 வயது சிறுவன்.. கண்ணீரில் பெற்றோர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் புஷ்பா நகர் பகுதியை சார்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திக் (வயது 14). இவர் செம்பாக்கத்தில் பக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இணையத்தளம் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இணையத்தளம் மூலமாக எடுக்கப்பட்டு வந்த பாடங்கள் கார்த்திக்கிற்கு புரியவில்லை. இதனால் பள்ளி திறந்த பின்னரே நான் படித்துக்கொள்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே, பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று சென்றுள்ளனர். 

மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மகன் தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் மகனின் உடலை கட்டியணைத்து அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Student Suicide due to Confusion of Online Class


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->