19 வயது இளம்பெண்., கேரளாவை தொடர்ந்து சென்னையை அதிர வைத்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக 19 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றிய போதிலும், நாடு முழுவதும் வரதட்சனைக் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வரதட்சினை கொடுமைகளால் பல உயிர்கள் தற்போதுவரை பறிபோய் கொண்டுதானிருக்கின்றன.

அண்மையில் கேரள மாநிலத்தில் இந்த வரதட்சணை கொடுமை பிரச்சனை பெரிய விவகாரமாக வெடித்தது. கேரள மாநில ஆளுநர் உண்ணாவிரதம் இருக்கும் அளவிற்கு இந்த வரதட்சணை விவகாரம் வெடித்தது.

இந்நிலையில், தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வரதட்சனை கொடுமையால் 19 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். (வயது 25) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சோலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்த சினேகா (வயது 19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், பிரமோத் கடந்த சில மாதங்களாக மனைவி சினேகாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இரு வாரத்துக்கும் சினேகா கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சேலையூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துள்ளார்.

சம்பவம் நடந்த நேற்று இரவு சினேகாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீண்டும் வாக்குவாதத்தில் பிரமோத் சண்டையிட்டு உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா, அவரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெகு நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த சினேகாவின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சினேகாவின் தந்தை சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai selaiyur young girl suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->