#Breaking: கழுத்தை நெரித்த வங்கிக்கடன் தொல்லை.. சென்னையில் காவல் அதிகாரியின் விபரீத முடிவு.!!
Chennai police suicide attempt Loan Torture
வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப் படை உதவி ஆய்வாளர் சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து சென்ற மக்களுக்கு அதிகர்ச்சியாக, இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காவல் அதிகாரி சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்குகையில், தற்கொலைக்கு முன்னதாக எழுதி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கடிதத்தில், தான் வங்கியில் வைத்திருந்த கடனை கேட்டு அதிகாரிகள் தொல்லை செய்வதாகவும், இதனால் வாழ விருப்பமின்றி இம்முடிவை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai police suicide attempt Loan Torture