முகக்கவசம் அணியாத தொழிலாளியை உதவி ஆய்வாளர் ஷூவால் மிதித்த சம்பவம்.. உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு.!!
Chennai Perumbakkam Police Sub Inspector John Dismiss by Higher Officials
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில், பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியுடன் செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கொ மற்றும் காவல்துறை அதிகாரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
இதன்போது, அங்குள்ள கோழிக்கடை அருகே செல்கையில், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளி முகக்கவசம் இன்றி பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட காவல் உதவி ஆய்வாளர் ஜான், எதற்காக முகக்கவசம் அணியவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் கடையின் ஊழியருக்கும் - காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கொ, தான் அணிந்திருந்த காலனியால் தொழிலாளியை தாக்கியிருக்கிறார்.
இந்த தாக்குதல் தொடர்பான விபரம் அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதனையடுத்து, சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் பரங்கிமலை துணை ஆணையர் அருண் கோபாலன் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்க்கோவின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகவே, காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கொ பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இணை ஆணையர் நரேந்திரன் நாயர் பிறப்பித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Perumbakkam Police Sub Inspector John Dismiss by Higher Officials