ஜெயலலிதாவுக்கு நான் தான் நேரடி வாரிசு.. எனக்கும் சொத்துல பங்கு வேண்டும் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதியவர்.! 
                                    
                                    
                                   chennai high court order to jayalalitha assets 50 percent share  asked old man case
 
                                 
                               
                                
                                      
                                            கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பகுதியைச் சேர்ந்த என். ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
"என்னுடைய பெற்றோர் ஆர்.ஜெயராம் மற்றும் ஜெ.ஜெயம்மா. இவர்களுக்கு நான் ஒரே பிள்ளை. இருப்பினும் என் தந்தை வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோர் பிறந்தனர். 

அந்த வகையில், ஜெயக்குமாரும் ஜெயலலிதாவும் என்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி ஆவர். கடந்த 1950-ம் ஆண்டில் என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் என் அம்மா வழக்கு தொடர்ந்தார்.
அப்போது, வேதவல்லி அவரது வாரிசுகள் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்தார். ஆனால், இந்த வழக்கு சமாதானத்தில் முடிந்தது.
இதில், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டார். தற்போது, சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் உறவு முறையில் நான் மட்டுமே உள்ளேன். 

ஆகவே, ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஐம்பது சதவீதம் எனக்கு தர வேண்டும். கடந்த  2020-ம் ஆண்டு ஜெயலலிதாவின் உறவுமுறை வாரிசு தீபா மற்றும் தீபக் தான் என்று அறிவித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கிற்கு தீபா மற்றும் தீபக் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
                                     
                                 
                   
                       English Summary
                       chennai high court order to jayalalitha assets 50 percent share  asked old man case