#Breaking: கோவில்கள் திறப்பு வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.!
Chennai High Court Order to Govt Answer about Temple Open on Vijaya Dhasami Day
கோவில்கள் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திறக்ககூறிய வழக்கில், தமிழக அரசு மதியம் 01:30 மணிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த ஆர். பொன்னுசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
இதனால் ஊரடங்கில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை என 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்படும்.
15 ஆம் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கோவில்களின் நடை மூடப்பட்டு இருக்கும். சென்னையில் உள்ள காசிமேடு மீன் அங்காடியை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், துர்க்கை அம்மனின் பக்தர்களின் மனதை கண்டுகொள்ளாமல் அரசு பிடிவாதமாக இருக்கிறது. இதனால் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவிலை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அதற்கான உத்தரவை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீதிபதி மகாதேவன் அமர்வில் இம்மனு விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரசு தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், "கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில் மூடப்பட்டுள்ளது, வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்களின் நலனுக்காக கோவில் மூடப்பட்டுள்ளது" என்று வாதிட்டார். இதனைக்குறித்து வைத்துக்கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இன்று மதியம் 01:30 மணிக்குள் அரசிடம் விளக்கம் கேட்டு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai High Court Order to Govt Answer about Temple Open on Vijaya Dhasami Day