செங்கல்பட்டு அரசு பள்ளியில் வைத்து மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர்கள்..!!
chennai high court order culprit teacher go jail case of girl students sexual torture
தமிழகத்தின் செங்கல்பட்டு நகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நாகராஜ், புகழேந்தி என்ற இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் வயது 50 க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இருவரும் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த சமயத்தில், இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களிடம் பயின்று வரும் மாணவிகளிடம், தங்களின் அலைபேசியில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை வழங்கி வந்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணைக்கு பின்னர், எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் இவர்கள் இருவரும் 2018 ஆம் வருடமே விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த ஆசிரியர்களின் மீது பாதிக்கப்பட்ட மாணவிகளில், ஒரேயொரு மாணவியின் பெற்றோர்கள் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டிற்கு பின்னர் ஆசிரியர்களின் மீதுள்ள குற்றம் உறுதியானது. இதன்பின்னர் விடுதலை உத்தரவு இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று இரண்டு காமுக ஆசியர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நகராஜிற்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.24 ஆயிரம் அபராதமும், புகழேந்திக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், நாகராஜ் தமிழக அரசுடைய நல்லாசிரியர் விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
chennai high court order culprit teacher go jail case of girl students sexual torture