செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை : மூன்றாவது நீதிபதி பிறப்பித்த உத்தரவு!
Chennai HC Senthilbalaji Case july 07
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி இன்று மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது அமலாக்கத்துறை சார்பிலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், வழக்கு விசாரணை வருகின்ற ஜூலை 11 மற்றும் 12 நடத்தப்படும் என்று தெரிவித்து, இன்றைய விசாரணையை முடித்து வைத்தார்.
மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தலைமையிலான இந்த விசாரணை என்பது சற்று மாறுபட்டதாக அமையவுள்ளது.
ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அமர்வில் வைக்கப்பட்ட வாதங்களை மீண்டும் வாதமாக வைக்க வேண்டாம் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும், புதிய வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும், இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் விவரங்களை கருத்தில் கொண்டு இந்த வாதங்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
English Summary
Chennai HC Senthilbalaji Case july 07