திருமணம் செய்வதாக ஏமாற்றி உணவு வழங்காமல் பெண் சித்ரவதை.. சென்னையில் பகீர் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவரின் பெயர் ஜோ. இவர் தனியார் வரன் அமைப்பு நிறுவனத்தின் மூலமாக பெங்களூரை சார்ந்த நித்யா என்ற பெண்ணின் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இவர்கள் இருவரும் அலைபேசி மூலமாக பேசி வந்த நிலையில், பெண்ணிற்கு தனது நிறுவனத்திலேயே பணி ஏற்படுத்தி தருவதாக கூறி ஜோ சென்னைக்கு வரவழைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதலாகவே சென்னையில் பெண்மணி ஜோவுடன் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், தற்போது ஜோவின் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், திருமணம் கூட செய்யாமல் கதையிடம் ரூ.96 இலட்சம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஊரடங்கால் ரூ.6 இலட்சம் முதல் தவணையாக கொடுத்தால் மட்டுமே நிறுவனத்தை விட்டு வெளியே விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். 

இதுமட்டுமல்லாது ஜோவின் கூட்டாளிகளான அமேண்டா மற்றும் சாண்டி ஆகியோரும் சேர்ந்து பெண்ணை கொடுமைப்படுத்தி, உணவு தண்ணீர் போன்றவை கூட தராமல் சித்ரவதை செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து பெண் தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து பெண்ணின் தந்தை சென்னையில் இருக்கும் தனது உறவினர்களிடம் விஷயத்தை தெரியப்படுத்தி, காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், ஜோ உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl tortured by gang cheated marriage desire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->