வினையில் முடிந்த விளையாட்டு.. மாஞ்சா கயிறால் உயிரிழந்த சிறுவன் விவகாரத்தில்., பேரதிர்ச்சி சோகம்.!!
Chennai boy died manja rope police arrest two culprit
தமிழகத்தின் சென்னையில் உள்ள கொண்டியதோப்பு பகுதியை சார்ந்தவர் கோபால். இவர் தனது மூன்று வயது மகனான அபிஷேக்குடன்., இரு சக்கர வாகனத்தில் அங்குள்ள கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்தார்.
இந்த சமயத்தில்., இதே பகுதியை சார்ந்த இளைஞர்கள் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டுக்கொண்டு இருந்த நிலையில்., மாஞ்சா நூலானது குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளது. இதனை கவனித்த சிறுவனின் தந்தை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்., சிறுவனின் கழுத்தில் இருந்து இரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிருக்கு துடிதுடித்துள்ளான்.
மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்ற பின்னர்., சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த பெற்றோர் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வந்த நிலையில்., ஒரு சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும்., மாஞ்சா நூல் கலந்த பட்டத்தை 15 வயது சிறுவனிற்கு விற்பனை செய்த கொருக்குவார்பேட்டை பகுதியை சார்ந்த நாகராஜ் மற்றும் பட்டம் விட்ட சிறுவன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணையில்., சிறுவன் விளையாட்டுத்தனமாக பட்டம் விட்டதாகவும்., காற்றின் வேகத்தால் நிலைத்தவறி சென்ற பட்டத்தால் சோகம் அரங்கேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai boy died manja rope police arrest two culprit