சென்னை கழிவுநீர் தொட்டி மரணத்தில் திடீர் திருப்பம்!  - Seithipunal
Seithipunal


சென்னை : கழிவுநீர் தொட்டியில் இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விஷவாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடியில் மத்திய அரசின் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டில் இறங்கிய மோசஸ் மற்றும் தேவன் என்ற ஒப்பந்த தொழிலாளர்கள், போதிய உபகரணங்கள் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் இறங்கியுள்ளனர்.

திடீரென உள்ளே இருந்து விஷவாயு கசிந்ததால், இருவரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவ குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒப்பந்ததாரர் சம்பத் மற்றும் மேற்பார்வையாளர் மனோ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, தற்போது சிறையில் அடைத்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Aavadi Labours Death Case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->