#சென்னையில் கோர விபத்து., இருசக்கர வாகன ஓட்டிகளே கவனம்.! வெளியான சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார்.

சென்னை ஆவடி டெப்போ அருகே பேருந்துக்கும், லாரிக்கும் இடையே இருசக்கரவாகனம் சிக்கிய விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரும் இவருடைய நண்பரும் இன்று காலை, இவர்களின் நண்பரை பார்க்க சிபிஎஸ் சாலையில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆவடி டெப்போ அருகே சென்னை மாநகரப் பேருந்து நின்றுகொண்டிருந்தது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மூர்த்தி, சென்னை மாநகர பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, பின்னால் வந்த லாரிக்கும்,  பேருந்துக்கு இடையே இருசக்கரவாகனம் சிக்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலை மற்றும் வயிற்றில் பலத்த காயமடைந்த இருவரும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் பெட்ரோல் வெளியாகி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இந்த விபத்தில் இந்த விபத்தில் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு சொல்லும் வழியிலேயே மூர்த்தி நண்பர் அழகுதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

மூர்த்தி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI AAVADI BIKE ACCIDENT CCTV


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->