சென்னை | கழிவுநீர் தொட்டியில் விஷவாயுத்தாக்கி 2 தொழிலாளர்கள் பலி! - Seithipunal
Seithipunal


 

சென்னை ஆவடியில், கழிவுநீர் தொட்டியில் இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விஷவாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரிய பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டில் இறங்கிய மோசஸ் மற்றும் தேவன் என்ற ஒப்பந்த தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கழிவு நீர் தொட்டிகளை போதிய உபகரணங்கள் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல், மனிதர்களை உள்ளே இறக்கி சுத்தப்படுத்தக் கூடாது என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மத்திய அரசின் குடியிருப்பு பகுதியில் சற்று முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்ய இறங்கியுள்ளனர்.

அவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

திடீரென உள்ளே இருந்து விஷவாயு கசிந்ததால், இருவரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவ குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Aavadi 2 labours death


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->