கஞ்சா புகைப்பதை கண்டித்த மாமாவை போட்டுத்தள்ளிய அக்கா மகன்.. அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் அருகே தையூர் கோமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 55). இவர் தோட்ட காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில், தான் பணியாற்றும் தோட்டத்திற்கு காலைக்கடன் கழிப்பதற்காக செல்கையில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கேளம்பாக்கம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவரது அக்கா மரகதம் என்பவருக்கும், சாமுவேலிற்கும் இடையே குடும்ப பிரச்சனை இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனால் 10 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் பேசாமல் இருந்த வந்த நிலையில், சாமுவேல் வேலை பார்த்த தோட்டத்திற்கு அருகே அக்கா மகன் விமல் ராஜ், தன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்ததை சாமுவேல் பார்த்து கண்டித்துள்ளார். 

மேலும், இதனை மீண்டும் செய்தால் உனது பெற்றோரிடம் கூறிவிடுவேன். உடலுக்கு கேடுவிளைவிக்கும் பழக்கத்தை கைவிடக்கூறி கண்டித்துள்ளார். இதனால் பயந்துபோன விமல் ராஜ் கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் மாமா தெரிவித்துவிடுவார் என்று அஞ்சி கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu man Murder Police Investigation 11 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->