காவிரி மேலாண்மை ஆணையத்தின் 48-வது கூட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!
Cauvery Authority 48th Meet on Feb 13
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மிக முக்கியமான 48-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் (CWMA) கூட்டம் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் டெல்லி அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்பின்படி மாதாந்திர நீர்ப்பகிர்வை உறுதி செய்தல் மற்றும் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கூட்டத்தில் உத்தரவிடப்பட்ட 2.76 டிஎம்சி தண்ணீர் திறப்பின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்படும்.
மேகதாது அணை விவகாரம்:
இக்கூட்டம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் 13, 2025 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பின்னணியில் இது கூடுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு: மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை (DPR) மீது, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கங்களைப் பெற்று மத்திய நீர்வள ஆணையம் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
காவிரி நீர்ப்பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட இந்த 48-வது கூட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Cauvery Authority 48th Meet on Feb 13