கொடைக்கானல் : மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.!
car fire accident on mid road in kodaikanal
கொடைக்கானல் : மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.!
தேனி மாவட்டத்தில் உள்ள போடியை சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் தனது குடும்பத்துடன் காரில் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு போடிக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து இந்த கார் கொடைக்கானல் மலையடிவாரம் காமக்காபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது காரின் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து சிராஜுதீன் துரிதமாக செயல்பட்டு காரை ஓரமாக நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரைவிட்டு இறங்கினர். இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பிடித்து மளமளவென்று எரிய தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததில் கார் முழுவதும் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
car fire accident on mid road in kodaikanal