கேபிள் வயர்கள் பொறுத்தும் பணியில் ஈடுப்பட்டவருக்கு நிகழந்த சோகம்..!
Cable TV operator killed by electric shock
மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பிரைண்ட்நகரை சேர்ந்தவர் விநாயகசுந்தரம் (44). இவர் அந்த பகுதியில் கேபிள் டிவி ஆப்ரேட்டர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் கேபிள் வயர்களை பொருத்தி கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பற்படுத்தியுள்ளது.
English Summary
Cable TV operator killed by electric shock