அரியலூர் : தலையில் ஏறிய பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


தனது தலையில் பேருந்து ஏறியும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அரியலூர் ஒட்டகோவில் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சத்தியசீலன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்மன் கோவில் வளைவில் திரும்பிய போது எதிரே மினி பேருந்து ஒன்று வந்துள்ளது.

அப்போது அவர் திடீரென பிரேக் பிடித்து பைக்கை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்துள்ளது. இதனிடையே பேருந்து அருகில் வர தனது இருசக்கர வாகனத்துடன் சேர்ந்து பேருந்தின் பின் சக்கரத்தில் அவர் சிக்கியுள்ளார். 

அதில் பேருந்து சத்தியசீலன் தலையில் ஏறியது. ஆனால் அவர் மிகவும் தரமான தலைக்கவசம் அணிந்திருந்ததால் பேருந்து சக்கரத்தால் தலைக்கவசத்தை உடைக்க முடியவில்லை. அதனால் லேசான காயங்களுடன் பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus thrown on his head Fortunately the hlmet survived


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->