ஈரோடு அருகே பரிதாபம்..! எமனாக மாறிய லாரி... அக்கா-தம்பிக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் அக்கா-தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (21), மகள் ஞானசவுந்தர்யா (21). இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் ஞானசவுந்தர்யாவுடன் குமாரபாளையத்தில் இருந்து பெரிய கொடிவேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆப்பக்கூடல் காவல் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிளும், அவ்வழியாக வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ஞானசவுந்தர்யாவை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஞானசவுந்தர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother sister killed in lorry collision in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->