தங்கையின் திருமண வேலையின் போது அண்ணனுக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே சகோதரியின் திருமண வேலையின் போது அவரது அண்ணன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததால் திருமணம் நின்று போன சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குருவம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது 2 சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில், இளைய சகோதரியான மீனாவிற்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. நேற்று மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்த காரணத்தால் சமையல் தயாரிப்பு பணியில் தனபால் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இயற்கை உபாதைக்காக வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றுக்கு அருகே சென்ற பொழுது கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அந்த கிணற்றில் தண்ணீர் வற்றி இருந்தால் கீழே விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது. அண்ணனின் மரணத்தால் தங்கையின் திருமணம் நின்று போன நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother dead in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->