சொத்து தகராற்றால் நேர்ந்த விபரீதம்.. தம்பியை வெட்டிய அண்ணன்...!
Brother arrested for stabbing brother
நிலத்தகராற்றில் தம்பியை வெட்டிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்..
திருப்பத்தூர் மாவட்டம், சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா . இவருக்கு காந்தி என்ற தம்பி உள்ளார். இருவருக்கும் இடையில் நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் காந்தியை வெட்டினார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Brother arrested for stabbing brother