சொத்து தகராற்றால் நேர்ந்த விபரீதம்.. தம்பியை வெட்டிய அண்ணன்...! - Seithipunal
Seithipunal


நிலத்தகராற்றில் தம்பியை வெட்டிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்..

திருப்பத்தூர் மாவட்டம், சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா . இவருக்கு காந்தி  என்ற தம்பி உள்ளார். இருவருக்கும் இடையில் நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.  இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் காந்தியை வெட்டினார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother arrested for stabbing brother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->