திண்டுக்கல்: மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி..!
Boys drown and die In Dindugal
நீரில் மூழ்கி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரிஷ்குமார் (15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்டு (15) என்பவரும் அங்குள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாரத விதமாக விதமாக நீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Boys drown and die In Dindugal