திண்டுக்கல்: மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி..! - Seithipunal
Seithipunal


நீரில் மூழ்கி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரி‌ஷ்குமார் (15).  இவர் அந்த பகுதியில்  உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்டு  (15) என்பவரும் அங்குள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாரத விதமாக விதமாக நீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boys drown and die In Dindugal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->