ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை சீரழித்த வாலிபர்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை கிராமத்தில் ராஜா-தேவிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இவர் மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அஜித்திற்கும், 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அஜித் தனது தாய், தந்தை மற்றும் சிறுமியுடன் சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஜித் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் ராஜா, தேவிகா மற்றும் அஜித் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy cheat 13 year old girl and get married


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->