சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!
Bomb threat to Chennai Central Railway Station
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் முக்கிய ரெயில் நிலையமான சென்டிரல் ரெயில்நிலையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து, மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சென்டிரல் ரெயில்நிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளையும் காவல்துறையின்ர தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஏப்.25ம் தேதி இதே போல மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
English Summary
Bomb threat to Chennai Central Railway Station