திருவள்ளூர்: குளத்தில் மிதந்த ஆண் பிணம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் குளத்தில் மிதந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பாடசெட்டி குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து குளத்தின் அருகே கிடந்த அவரது ஆடையில் உள்ள அடையாள அட்டை வைத்து உயிரிழந்தவர், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி(50) என்பதும், அவர் திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body of a man floating in the pond in tiruvallur


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->