சென்னையில் பரபரப்பு சம்பவம்.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை.! - Seithipunal
Seithipunal


சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.50 மணி அளவில் பாலச்சந்திரன் போலீசார் பாதுகாப்புடன் சிந்தாரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார். அங்கு சிலருடன் பாலச்சந்திரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த டீ கடைக்கு சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் பாஜக நிர்வாகி பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாரிப்பேட்டை போலீசார் பாலச்சந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக நிர்வாகி படுகொலை தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP executive hacked to death in Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->