அரசு ஓட்டுநரை "சோடா பாட்டிலால்" தாக்கிய பாஜக பிரமுகர் கைது.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டில் உள்ள தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதி நெருங்கி உள்ள சூழலில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

அதேபோன்று அரசியல் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இத்தகைய சூழலில் நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றிய போது அரசு பேருந்தில் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்ற பாஜக பிரமுகர் மருதுபாணடியை அரசு பேருந்து நடத்துனர் பாஸ்கர் தடுக்க முயன்றார். 

அப்போது அந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனுக்கும் பாஜக பிரமுகர் மருது பாண்டியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தகராறில் அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியனின் தலையில் சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் மருது பாண்டியன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இதனை அடுத்து படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக பிரமுகர் மருது பாண்டியன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP cadre arrested who attack govt bus driver


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->