கழிவுநீர் தொட்டியில் அசைவு.. மஞ்சப்பையை திறந்த மக்களுக்கு அதிர்ச்சி.!
Baby Trichy
திருச்சியில் உள்ள முசிறி அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இத்தகைய நிலையில், மருத்துவமனையின் பின்புறம் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் ஒரு துணிப்பை அதை துணிப்பை அசைவது போல தெரிந்த காரணத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அந்த பையை திறந்து பார்த்த பொழுது அதில் ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் உடனடியாக மருத்துவர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட அவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த குழந்தையை வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து இன்னமும் தகவல் தெரியவில்லை.