கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து கணவன்-மனைவி பலி.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் புகளூர் ஆவித்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைப்பவர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சரக்கு ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு மனைவி பானுமதி மற்றும் மகள் அகல்யாவுடன் புகளூருக்கு வந்துள்ளார். அப்போது வெள்ளகோவில் அருகே சென்னாக்கல்மேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றுக்குள் விழுந்தது.

கிணற்றில் 60 அடிக்கு தண்ணீர் இருந்ததால் ஆட்டோ மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக மகள் அகல்யா மட்டும் நீந்தி தப்பி மேலே வந்து சத்தம் போட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதை வெளியே எடுத்தனர். அதில் வடிவேலுவும், பானுமதியும் பிணமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto overturns in well husband and wife death


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->