ஓட்டலில் பர்கர் வாங்கிய கஸ்டமருக்கு அதிர்ச்சி.! வைரலாகும் பகீர் வீடியோ.!
auroville customer getting burger with clouse
ஆரோவில் அருகில் பிரபல ஓட்டலில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பர்கரில் கை உறை இருந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் டேவிட் என்ற நபர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ஆரோவில் அருகில் இருக்கின்ற பிரபலமான ஓட்டலில் பர்கர் வாங்கி இருக்கின்றார்.
இதை சாப்பிடும் பொழுது, பர்கரில் பிளாஸ்டிக் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பிளாஸ்டிக்கை எடுத்து பார்த்த பொழுது, ஊழியர்கள் சமைக்கும் போது பயன்படுத்திய கையுறை என்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஊழியர்களை அழைத்து கேட்ட போது அதற்கு கடை ஊழியர்கள், மன்னிப்பு கேட்டு வேறொரு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். இருப்பினும், இதை ஏற்க மறுத்த டேவிட், உணவு பாதுகாப்புத்துறைக்கு இதனை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.
பிளாஸ்டிக்குடன் இருக்கும் பர்கரை குழந்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று, கடை ஊழிர்களிடம் டேவிட் கேள்வி கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி விமர்சனங்களை பெற்று வருகின்றது.
English Summary
auroville customer getting burger with clouse