#சேலம் || கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளை கற்களை கடத்தி சென்ற கும்பலைப் பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு உட்டப்பட்ட காளியம்மன் கோவில் மூலக்கடை அருகே வெள்ளை கற்கள் கடத்துவதாக கிராமர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து வெள்ளை கற்கள் கடத்திய வாகனத்தை பிடிக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் குமாரை மர்ம கும்பல் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attack on Village Administrative Officer in salem


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->