அரியலூர்: சிறப்பு காவல் அதிகாரி தற்கொலை விவகாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
Ariyalur Special Sub Inspector Jegadeesan Suicide Case Mystery Discovered
அரியலூர் மாவட்டத்தில் உள்ள டி.பழூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ஜெகதீசன் (வயது 53) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் நீதிமன்றம் தொடர்புடைய பணி, எஸ்.பி அலுவலக முகாம் பணி, மதுவிலக்கு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் காவலர் குடியிருப்பில் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி காலை 10 மணிக்குப் பின்னரும் பணிக்கு வராமல் இருந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்து அவரின் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை.
இதனையடுத்து, பக்கத்து வீட்டில் வசித்து வந்த மற்றொரு காவல் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு, சக்திவேலை அழைக்க தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த மற்றொரு காவல் அதிகாரி, சக்திவேலின் வீட்டிற்கு சென்று பார்க்கையில், அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், கடந்த 9 ஆம் தேதி இரவில் மது அருந்திய காவல் அதிகாரி ஜெகதீசன், திருத்தனமாக மதுவிற்பனை செய்தவர்களிடம் மது வாங்கி அருந்தியுள்ளார்.
பின்னர் பத்தாம் தேதி இரவு மது அருந்த முடிவு செய்த நிலையில், திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தவர்கள் நேற்றுதான் மதுபானம் வாங்கி சென்றீர்கள் என்று தகராறு செய்து, சக்திவேலை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்துபோன ஜெகதீசன் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur Special Sub Inspector Jegadeesan Suicide Case Mystery Discovered