தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு.!
apr 05 corona update in tamilnadu
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் மட்டும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலிடத்தில் சென்னை 88, திண்டுக்கல் 43, திருநெல்வேலி 37, ஈரோடு 32, கோவை 29, நாமக்கல் 24, ராணிப்பேட்டை 23, கரூர் 22, செங்கல்பட்டு 19, மதுரை 17, திருச்சி 17, திருவாரூர் 12, திருவள்ளூர் 11, விருதுநகர் 11, திருப்பத்தூர் 10, விழுப்புரம் 10, சேலம் 9, தூத்துக்குடி 9, திருவண்ணாமலை 6, நாகை 5, சிவகங்கை 5, கன்னியாகுமாரி 5, வேலூர் 3, காஞ்சிபுரம் 3, கடலூர் 3, திருப்பூர் 3, ராமநாதபுரம் 2, கள்ளக்குறிச்சி 2, தஞ்சாவூர் 1, பெரம்பலூர் 1 என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
English Summary
apr 05 corona update in tamilnadu