காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு செய்தது என்ன?.. அமித் ஷா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து தனியார் விடுதியில் ஓய்வெடுத்த பின்னர், தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசு அநீதி இழைப்பதாக தெரிவித்தார்கள்.. கடந்த 10 வருடங்களாக மத்திய அரசுடன் திமுக ஆட்சியின் போது இணைந்து பணியாற்றியுள்ளது. அவர்கள் செய்ததை பட்டியல் போட முடியுமா?.. நான் பட்டியல் போட்டு காட்டுகிறேன். 

எடுத்துக்காட்டுக்காக மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 13 மற்றும் 14 ஆம் நிதியாண்டு திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.11,520 ஆயிரம் கோடி வரைவு திட்டத்தை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. நாங்கள் ரூ.32 ஆயிரம் கோடிக்கணக்கான திட்டத்தை அறிவித்துள்ளோம். இதனைப்போன்று பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amith Shah Speech about DMK and Congress Party Ex Govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->