திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி? பொதுமக்கள் அச்சம்..!
Allegation of mixing plastic rice in ration shops near tittakudi Cuddalore
திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலம்பாடி பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான அரிசி கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அரிசியை ஊற வைக்கும் போது, அந்த அரிசி மட்டும் தனியாக மிதப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை சோதனை செய்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Allegation of mixing plastic rice in ration shops near tittakudi Cuddalore