திருச்சி: மதுப்பழக்கத்திற்கு அடிமையான பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மதுவிற்கு அடிமையான பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருடைய மனைவி தமிழரசி (57). கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கஸ்தூரி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தமிழரசி மதுவுக்கு அடிமையாகினார். இதையடுத்து தாய் வீட்டில் வசித்து வந்த தமிழரசி மது குடித்து வந்ததால், அவரது தாய் கண்டித்துள்ளார்.

இருந்தாலும் தொடர்ந்து தமிழரசி மது குடித்து வந்த நிலையில், தாய் மற்றும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழரசி தற்கொலை செய்து கொள்வதற்காக அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தமிழரசி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alcoholic woman commits suicide in Trichy


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->