குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டு கர்ப்பமான பெண்.. நீதிமன்றத்தில் வழக்கு!!
after family planing surgery women has pregnent
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஷிபா என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,கடந்த 2018 ஆம் ஆண்டு செப் 4 ஆம் தேதி நான் நெல்லை அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார்.
எனவே, நெல்லை அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஷிபா தாக்கல் செய்த மனுவை ஏற்ற்றுக்கொண்டு வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், அம்மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வழக்கை ஒத்திவைத்தார்.
English Summary
after family planing surgery women has pregnent