முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.!!
admk corona fund crore
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62லிருந்து 68ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்து உள்ளது.
இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.62.30 கோடி வந்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிவாரணம் அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.