திருவள்ளூர்: லாரி மோதி விவசாயி பலி..!! டிரைவர் தலைமறைவு..!!
Accident Near Thiruvalluvar
லாரி மோதி விவாசாயில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டம் நாசரத் பேட்டை பகுதியில் வசித்து வருவபர் கோபால் ( 55). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் அங்குள்ள உணவகம் ஒன்றில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் வந்த லாரி ஒன்று திடீரென அவர் மீது மோதியது. இதில் கோபால் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனனக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமாக இருந்த லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Accident Near Thiruvalluvar