மரத்தின் மீது மோதிய இரு சக்கர வாகனம்.. இருவர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  சிவகாசியை சேர்ந்த அபினேஷ்  என்பவரும் தருண்ராஜ் என்பவரும் படித்து வந்துள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையை ஓட்டி தருண்ராஜ் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

விடுமுறை முடிந்து அவரும் அபினேஷூம் தருண்ராஜும் இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மரத்தின்  மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தருண்ராஜை அக்கம்பக்கதினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near Thiruppur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->