கரூர்: வேன் மீது மோதி இளைஞர் பலி...!!
Accident Near Karur
கரூர் மாவட்டம் ,கொம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவருக்கு வயது 30 .இவர் கரூரில் உள்ள செல்போன் டவர் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வருகிறார். தினமும் அலுவலகத்திற்கு அவரது மோட்டார் சைக்கிளில் வருவது வழக்கம்.
அதே போல் நேற்று பணி முடித்து சிந்தலவாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அவர் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேன் ஒன்று திடீரென்று பிரேக் போட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த அவர் வேன் மீதி வேகமாக மோதினார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.