அரியலூரில், கொடூர விபத்து.! டிஎஸ்பிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!  - Seithipunal
Seithipunal


இன்று காவலர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதற்கு அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்விற்கான கண்காணிப்பு பணியில் திருச்சி டிஎஸ்பி குணசேகரன் ஈடுபட இருந்தார்.

இதற்காக அவர் பெரம்பலூர் வழியாக திருச்சியில் இருந்து அரியலூருக்கு தனது போலீஸ் ஜீப்பில் சென்றுள்ளார். அப்போது அரியலூர் அருகே மிதிவண்டி ஒன்றில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஜீப்பை ஒரு பக்கமாக திருப்பியுள்ளார்.

accident, seithipunal

இதன் காரணமாக அது வேகமாக சென்று கொண்டிருந்ததன் காரணமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தின் காரணமாக டிரைவர் மற்றும் டிஎஸ்பி குணசேகரன் ஆகியோர் மிகவும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் எஸ்பி சீனிவாசன் மற்றும் டிஎஸ்பி இளஞ்செழியன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறியதுடன்m அவரது மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->