#சற்றுமுன் | சென்னை, ஆவடியில் ரயில்முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை - வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


ஆவடி ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில், திடீரென ரயில் முன்பு பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஆவடி பகுதியை சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் மகன் மோனிஷ் (17 வயது), திருமுல்லைவாயலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் இரண்டாம் படித்து வருகிறார்.

ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை பெறுவதற்காக, மாணவன் மோனிஷ் இன்று சென்றுள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமடைந்த கல்லூரி மாணவன் மோனிஷ், திருப்பதியில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavadi Diploma college student suicide


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->