தி.மலை | கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை : ஆரணி அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். 

இவருக்கும் ஆரணி அடுத்த சேதாரம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபருக்கு சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் நண்பராக இருந்துள்ளார்.

இந்த நிலையில், சட்டக்கல்லூரி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு புகைப்படம் வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் மாணவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து அந்த படத்தை அனுப்பிய வாலிபரிடம் மாணவி விசாரிக்கவே, "இந்த புகைப்படம் வேறு ஒரு நபரின் செல்போனில் இருந்து எனக்கு கிடைத்தது. அந்த செல்போனில் இருந்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நான் அழித்துவிட்டேன். நீ கவலைப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவி, உடனடியாக வேலூர் சைபர் கிரைம் போலீஸருக்கு புகார் அளித்தார். பெற்றுக்கொண்ட போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் சட்டக் கல்லூரி மாணவியின் நண்பர் மற்றும் அவரின் சென்னை நண்பர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aarani college girl pic misuse


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->